புதன், 9 ஜனவரி, 2008

அமெரிக்க குசும்பு............

எதேச்சையாக பார் ஒன்றில் நுழைந்த ஒருவனுக்கு அதிர்ச்சி.உற்சாக பானத்தில் மிதந்து கொண்டிருந்த இரு ஆசாமிகளும் அசப்பில் ஜார்ஜ் புஷ்சை போலவும் அவரது பாதுகாப்பு அமைச்சரை போலவும் தெரிய வெயிட்டரிடம் அது அவர்கள்தானா என்று விசாரிக்க,
அதுகளே! என்றார் வெயிட்டர்.
உற்சாக மிகுதியில் துள்ளிக்குதித்த அவன்.
"ஹலோ புஷ்.....நீங்கள் எதைப்பற்றி இவ்வளவு சீரியசாக விவாதித்துக் கொண்டு இருக்கிறிர்கள்" என்றான்.
"நாங்கள் அடுத்து வரப்போகும் மூன்றாம் உலகப்போரைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கிறோம்" என்றது புஷ்
"அதில் என்ன செய்வதாக உத்தேசம்"என்றான் அவன்.
"இந்த முறை ஒரு கோடி ஈராக்கியர்களையும் ஒரு அழகியையும் கொல்லப்போகிறோம்"என்றார் புஷ்.
உடனே உணர்ச்சிவசப்பட்ட அவன்"அந்த அழகியை எதற்காக கொல்லப்போகிறிர்கள்"என்றான் கோபமாக.
"டேய் மச்சான்! நான் சொல்லலை.இவனுங்க அந்த ஒரு பொம்பளையை பத்தி மட்டும்தான் கவலை படுவானுங்க,ஒரு
கோடி ஈராக்கியர்களை பத்தி கேக்க மாட்டானுங்க" என்றாராம் புஷ் தனது பாதுகாப்பு அமைச்சரிடம்.

கருத்துகள் இல்லை: